Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமத்திவேலூர்: பரமத்தி வேலூரிலுள்ள கந்தசாமி கண்டர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டார் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாணவ, மாணவியர் தமிழரின் பாரம்பரிய உடையான சேலை வேட்டி அணிந்து வந்து சமத்துவமாக ஒன்று சேர்ந்து மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பின்னர் பொங்கல் வைத்த பின்பு பொங்க பானை, கரும்பு, தேங்காய், பழம் படையல் இட்டு கதிரவனை வணங்கி பொங்க பானைக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வர் ஆசிரியர் ஆசிரியர்கள் வழிபட்டனர்.
அதன் பின்னர் தமிழர்களின் பொங்கலின் பாரம்பரிய பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.